மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி லண்டனில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. இது, அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீதான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போரை விவாதிக்க ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது.
ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவ முயன்றுவரும் ட்ரம்ப், அரசியல் எதிர்ப்புக்களை நசுக்க அரசின் முழுப் பலத்தையும் திரட்டி, தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகிறார். இதில் எலோன் மஸ்க் தலைமையிலான அரசாங்க செயல்திறன் துறையில் பாரிய பணிநீக்கங்களும் அடங்கும்.
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு முகவர்கள், நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை எல் சால்வடாரில் உள்ள வதை முகாம்களுக்கு நாடுகடத்த இலக்கு வைத்து, பட்டப்பகலில் சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களைக் கடத்தி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, அவர்களுக்கு உரிய நடைமுறை அல்லது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதை மறுத்து வருகின்றனர். “அமெரிக்காவில் பிறந்த” அமெரிக்க குடிமக்களுக்கும் இதையே செய்ய ட்ரம்ப் தனது நோக்கத்தை அறிவித்துள்ளார்.
காஸா இனப்படுகொலையை எதிர்த்ததற்காக மாணவர்களும் கல்வியாளர்களும் நாடுகடத்தப்படுவதையும் வெளியேற்றப்படுவதையும் எதிர்கொள்கின்றனர். விஸ்கான்சினைச் சேர்ந்த ஹன்னா டுகன் என்ற நீதிபதி கூட, ஒரு புலம்பெயர்ந்தவரைப் பாதுகாத்ததற்காக கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான தனது பதவிப் பிரமாணத்தை நிலைநிறுத்த வேண்டிய கடமை தனக்கு இல்லை என்றும், அமெரிக்க மக்கள் 250 ஆண்டுகாலமாக தலைமுறைகளாகப் போராடி வென்ற எந்த உரிமைகளையும் இனி பெற மாட்டார்கள் என்றும் ட்ரம்ப் இப்போது வெளிப்படையாக அறிவிக்கிறார்.
கூட்டத்தில் எமது பேச்சாளர்கள், அமெரிக்கா பாசிசமாக மாறுகிறதா? என்ற கேள்வியை எழுப்பி பதிலளிப்பார்கள். ட்ரம்பின் ஆட்சி உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்பதை அவர்கள் கூட்டத்தில் விளக்குவார்கள்.
இராணுவ பலத்தைப் பயன்படுத்தி கனடா, கிரீன்லாந்து, பனாமா கால்வாய் மற்றும் மெக்சிகோவை இணைப்பதற்கான ட்ரம்பினது அச்சுறுத்தல்கள், காஸாவின் இன சுத்திகரிப்பை பூரணப்படுத்தும் இஸ்ரேலியத் திட்டங்களுக்கு ஒத்துழைப்ப வழங்குதல், மேலும், மனிதகுலத்தை ஒரு புதிய உலகப் போருக்கு நெருக்கமாகத் தள்ளும் சீனாவை இலக்காகக் கொண்ட வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்கு அவர் திரும்புவதற்கான பின்னணி ஆகியவற்றை கூட்டத்தில் பேச்சாளர்கள் முன் வைப்பார்கள்.
இந்தக் கூட்டம், ட்ரம்பை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் அரசு ஒடுக்குமுறை, காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவ வன்முறையை நோக்கித் திரும்புவதைத் தோற்கடிக்க அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு மூலோபாயத்தை கோடிட்டுக் காட்டும். இனப்படுகொலை எதிர்ப்புப் போராட்டங்களை ட்ரம்ப் ஒடுக்குவதுக்கு, இங்கிலாந்தில் ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கம் ஏன் முக்கிய உடந்தையாக மாறியுள்ளது என்பதையும் அவர்கள் விளக்குவார்கள்.
மொமோடூ தால் ஒரு பிரிட்டிஷ்-காம்பியன் இரட்டை குடியுரிமை பெற்றவர் ஆவர். அமெரிக்காவிலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை முடிக்கவிருந்தபோது அவரது மாணவர் விசா ரத்து செய்யப்பட்டது. பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்ததன் மூலம், சுதந்திரமான பேச்சுரிமைக்கான அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தச் சட்ட உரிமையைப் பயன்படுத்தியதற்காக, சிறைத்தண்டனை மற்றும் நாடுகடத்தலை எதிர்கொண்ட நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்களில் இவரும் ஒருவராக இருந்தார். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை குற்றமாக்கும் ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அவர் வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து, தாலின் F-1 மாணவர் விசா ரத்து செய்யப்பட்டது. நீதிமன்றங்கள் தனது கைது மற்றும் நாடுகடத்தலுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை என்ற முடிவுக்குப் பிறகு அவர் அமெரிக்காவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
எரிக் லீ, அமெரிக்க குடியேற்றம் மற்றும் சிவில் உரிமைகள் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் ஆவர். இவர், நாடுகடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் தாலின் சார்பாகப் பேசுகிறார். 2024 ஆம் ஆண்டில், தனது கணவரின் பச்சை குத்தல்கள் காரணமாக ஒரு தூதரக அதிகாரி விசா வழங்க மறுத்ததால், ஒன்பது ஆண்டுகள் கணவருடன் வாழ முடியாத ஒரு மனைவியின் சார்பாக லீ அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார். மாணவர் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களை குறிவைத்து பேச்சு சுதந்திரத்தின் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் அரசியலமைப்பிற்கு முரணான தாக்குதல் மற்றும் புலம்பெயர்ந்தோரை தன்னிச்சையாகக் கைது செய்தல், நாடுகடத்துதல் மற்றும் சிறையில் அடைத்தல் ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாடுவதற்கு எரிக் தனித்துவமான இடத்தில் உள்ளார்.
டேவிட் நோர்த், சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தலைவராகவும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவராகவும் உள்ளார். இவர், சோசலிச அரசியல், வரலாறு மற்றும் தத்துவம் குறித்த அத்தியாவசிய படைப்புகளின் ஆசிரியர் ஆவார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சோசலிச அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் நோர்த், ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்ததைப் பற்றிய தனது பகுப்பாய்வில் தனது விரிவான அரசியல் அனுபவத்தைக் கொண்டு வருகிறார். இதை அவர் “அமெரிக்காவில் நிலவும் உண்மையான சமூக உறவுகளுடன் ஒத்துப்போகும் அமெரிக்க அரசியல் மேற்கட்டுமானத்தின் வன்முறையான மறுசீரமைப்பு” என்று விவரித்துள்ளார்.
கூட்டத்திற்கான டிக்கெட்டுகள் Eventbrite இணையத்தளத்தில் கிடைக்கின்றன, மேலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. உங்கள் இடத்தை முன்பதிவு செய்ய சீக்கிரமாக பதிவு செய்யுங்கள்.
டிக்கெட்டுகளின் விலை விபரம்: வேலை செய்பர்களுக்கு £10 பவுண்டுகள் | வேலை இல்லாதவர்களுக்கு £5 பவுண்டுகள் | கூட்ட ஒற்றுமைக்கு £20 பவண்டுகள்.
கூட்டம் தொடர்பான விபரங்கள் :
லண்டன்
சனிக்கிழமை, மே 31, மதியம் 12:30 மணி,
Crowne Plaza, Kings Cross — Bloomsbury Suite
1 Kings Cross Road, Londres, Angleterre, WC1X 9HX
(கிங்ஸ் குரொஸ்-செயிண்ட் பான்க்ராஸ் ரயில் நிலையத்திலிருந்து 15 நிமிட நடை)
Eventbrite இல் உங்கள் டிக்கெட்டை வாங்கவும்: https://www.eventbrite.co.uk/e/trumps-war-on-free-speech-the-case-of-momodou-taal-tickets-1355443390669
மாற்றுத் திறனாளிகளுக்கும் அனுமதி உண்டு.
HEPA வடிப்பான்கள் கூட்டம் இடம்பெறும் இடத்தில் இயங்குவதுடன், மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள் நிகழ்வில் முடிந்தவரை பாதுகாப்பாக இருப்பதற்காக, முகக்கவசம் அணிவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.